உயர்ந்தது முட்டை விலை உயர்ந்தது முட்டை விலை ... நாட்டின் சில்லரை பணவீக்கம் 10.36 சதவீதமாக அதிகரிப்பு நாட்டின் சில்லரை பணவீக்கம் 10.36 சதவீதமாக அதிகரிப்பு ...
இந்திய பொருளாதாரத்தின் தர குறியீட்டை "பிட்ச் ' நிறுவனமும் குறைத்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
00:40

புதுடில்லி:எஸ் அண்டு பி நிறுவனத்தைத் தொடர்ந்து, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான "பிட்ச்', இந்தியாவின் பொருளாதார தரக் குறியீட்டை, "நிலையானது' என்ற பிரிவில் இருந்து "எதிர்மறை' என்ற நிலைக்கு குறைத்துள்ளது.
இடர்பாடு:இதன்படி, இந்தியாவின் நீண்டகால அன்னிய மற்றும் உள்நாட்டு செலாவணி சார்ந்த அளிப்புகள், இடர்பாடு காண சாத்தியக்கூறு உள்ளதைக் குறிக்கும் வகையில் "பீ.பீ.பீ.-' குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அரசின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டு, வர்த்தகம் மற்றும் தனியார் முதலீடுகளை அதிகரிக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காதபட்சத்தில், இந்தியாவின் நடுத்தர மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக "பிட்ச்' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் நிதி ஆதாரம் வலுப்பெற்றுள்ள போதிலும், மத்திய அரசின் நிதி ஆதாரத்தை பெருக்கும் செயல்பாடுகளில் முன்னேற்றம் குறைவாகவே உள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதும், பொது நிதியினங்கள் பலவீனமாக உள்ள நிலையில், சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதிச்சூழலில் காணப்படும் நெருக்கடியைச் சமாளித்து, இந்திய பொருளாதாரம் நீண்டகால அடிப்படையில் வளர்ச்சி காண@வண்டும். இதற்கான, நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு, மேலும் தீவிரமாக கொள்கைகளும், சீர்த்திருத்தங்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என,"பிட்ச்' நிறுவனத்தின் ஆசிய பசிபிக் நாடுகளின் தர நிர்ணய குழுமத் தலைவர் ஆர்ட் வூ தெரிவித்துள்ளார்.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாகும். இது,முந்தைய 2010-11ம் நிதியாண்டில் காணப்பட்ட 8.4 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.
வரும் 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என, முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. இது, தற்போது 6.5 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டில் 8.8 சதவீதமாக இருந்த மொத்த விலை குறியீட்டு எண், நடப்பு நிதியாண்டில், 7.5 சதவீதமாக குறையும் என்ற மதிப்பீட்டிலும் உயர்வு காணப்படும் என ஆர்ட் வூ தெரிவித்துள்ளார்.
மானிய "மை:சென்ற 2011-12ம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அரசு கடன் 66 சதவீதமாக உள்ளது. இது "பீ.பீ.பீ' தரக் குறியீட்டு மதிப்பீடான 39 சதவீதத்தை விட அதிகமாகும்.மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, அதன் இலக்கு அளவான 4.6 சதவீதத்தை விஞ்சி 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, மானியச் சுமை அதிகரிப்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மத்திய அரசு, வரிகள் மற்றும் மானியங்களில் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது.
இதனால், நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை மதிப்பீடு 5.1 சதவீதம் என்ற இலக்கில் இருந்து 5.6-5.9 சதவீதமாக உயரும்.மேலே கூறப்பட்ட காரணங்களுடன், திடமான கொள்கை யின்மையால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு காரணமாக, கடன் தகுதி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக "பிட்ச்' வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)