பதிவு செய்த நாள்
19 ஜூன்2012
00:42
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 322 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் இது மிகவும் அதிகபட்ச விலையாகும்.நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 316 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 6 காசுகள் உயர்த்தி, 322 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.முட்டை விலை, மே இறுதியில் இருந்து ஏற்றமான சூழலில் இருந்தது.
அதன்படி மே 31ம் தேதி, 283 காசுகள் என, இருந்த முட்டை விலை, படிப்படியாக ஏற்றம் கண்டு வந்தது. அதையடுத்து நேற்று, 322 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த 2011 டிச., 26ம் தேதி முட்டை விலை அதிகபட்சமாக, 320 காசுகள் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது."கோழித்தீவனம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை ஏற்றம், கேரளா மாநிலத்திற்கு அதிகளவு முட்டை விற்பனைக்கு செல்லுதல் போன்றவை, முட்டை விலை ஏற்றத்துக்கான காரணம். இதன் விலை மேலும், உயர வாய்ப்புள்ளது' என, கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|