பதிவு செய்த நாள்
19 ஜூன்2012
00:44
திருப்பூர்:"இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு நிதிக்கொள்கை தொழில் துறைக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது,' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என. கோரிக்கை விடப்பட்டிருந்தது. கடந்த நிதியாண்டில், வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதம் பல முறை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், "ரெப்போரேட்' விகிதங்கள் 0.5 சதவீதத்துக்கு குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில், இந்த வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை . இது, ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.அதேசமயம் நிதிக்கொள்கையில், ஏற்றுமதிக்கான மறுநிதி கடன் உச்சவரம்பு, 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதிக சுமையளிக்கும், வட்டி வகிதத்தை குறைப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை. இவ்வாறு சக்திவேல் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|