ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஏற்றுமதியாளர்கள் அதிருப்திரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி ... தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு ...
பொது துறை நிறுவன பங்கு விற்பனை :ரூ.30,000 கோடி திரட்ட அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
00:53

மும்பை:மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், 15 பொது துறை நிறுவனங்களில், கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 5-10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதின் வாயிலாக 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் பொருட்டு, நடப்பு
நிதியாண்டில், என்.எம்.டீ.சி மூலம் 125 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளது. அது போன்று பெல் நிறுவனப் பங்கு விற்பனை மூலம் 62 கோடி டாலரும், ஹிந்துஸ்தான் காப்பர் மூலம் 52 கோடி டாலரும், செயில் நிறுவனப் பங்கு விற்பனை மூலம் 36.5 கோடி டாலரும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இவை தவிர இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் 15.8 கோடி டாலரும், ஆயில் இந்தியா, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பங்கு வெளியீடு குறித்த ஆவணங்கள் 'செபி'க்கு அளிக்கப்பட்டுள்ளன.
நடப்பு 2012ம் ஆண்டின், முதல் காலாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்கு விற்பனை வாயிலாக 600 கோடி டாலர் திரட்டியுள்ளன. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில் திரட்டப்பட்ட தொகையை விட, இரு மடங்கு அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)