பதிவு செய்த நாள்
19 ஜூன்2012
00:53
மும்பை:மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், 15 பொது துறை நிறுவனங்களில், கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 5-10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதின் வாயிலாக 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் பொருட்டு, நடப்பு
நிதியாண்டில், என்.எம்.டீ.சி மூலம் 125 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளது. அது போன்று பெல் நிறுவனப் பங்கு விற்பனை மூலம் 62 கோடி டாலரும், ஹிந்துஸ்தான் காப்பர் மூலம் 52 கோடி டாலரும், செயில் நிறுவனப் பங்கு விற்பனை மூலம் 36.5 கோடி டாலரும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இவை தவிர இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் 15.8 கோடி டாலரும், ஆயில் இந்தியா, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பங்கு வெளியீடு குறித்த ஆவணங்கள் 'செபி'க்கு அளிக்கப்பட்டுள்ளன.
நடப்பு 2012ம் ஆண்டின், முதல் காலாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்கு விற்பனை வாயிலாக 600 கோடி டாலர் திரட்டியுள்ளன. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில் திரட்டப்பட்ட தொகையை விட, இரு மடங்கு அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|