பதிவு செய்த நாள்
19 ஜூன்2012
00:54
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால், அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில், 20 லட்சத்துக்கும் அதிகமாக தென்னை மரங்கள் உள்ளன. விலை Œரிவு:இங்கு விளையும் தேங்காய், கர்நாடகா, ஆந்திரா, குஜராத் மாநிலங்களுக்கும், எண்ணெய் உற்பத்தி செய்ய காங்கேயத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இரு மாதத்துக்கு முன்பு, ஒரு டன் தேங்காய், 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், தேங்காய் விலை Œரிவடைந்துள்ளது.மற்ற மாநிலங்களிலும் தேங்காய் விளைச்சல் அதிகரித்து, அதன் விலை வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. தற்போது, ஒரு டன் தேங்காய் (சராசரியாக 3,000 தேங்காய்), 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.பாலகுறியைச் சேர்ந்த தென்னை விவசாயி முனியப்பன் கூறியதாவது:
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தால், தேங்காயை பறிப்பதற்கும், அதை சேகரித்துக் கொட்டவும் ஆட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூலியும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பெண்களுக்கு, 150 ரூபாயும், ஆண்களுக்கு, 250 ரூபாயும் கூலி கொடுக்க வேண்டியுள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை:தேங்காய் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளும், வியாபாரிகளும் நஷ்டத்தில் உள்ளனர். தேங்காய் உரிக்க ஒரு தேங்காய்க்கு 40 காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் தேங்காய் மட்டை விலை, 15 காசாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.தேங்காய் பறிக்க ஆட்கள் இல்லாததாலும், தேங்காயை வாங்க வியாபாரிகள் வராததாலும் மண்டிகளில் தேங்காய்கள் லட்சக்கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. காங்கேயத்திலும் விலை குறைந்துள்ளதால், அங்கும் தேங்காய் கொப்பரைகளை அனுப்ப முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|