பதிவு செய்த நாள்
29 ஜூன்2013
14:47
சென்னை: ""பருவ மழை பொய்த்தாலும், உணவு தானிய உற்பத்தி குறையவில்லை,'' என, மத்திய உணவுத் துறை இணை அமைச்சர், தாமஸ் தெரிவித்துள்ளார். டில்லியில் இருந்து நேற்று, சென்னை வந்த அமைச்சர் தாமஸ், விமான நிலையத்தில் அளித்த பேட்டி: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இம்மசோதா நிறைவேறினால், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயன் பெறுவர். வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், இம்மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டு, பருவ மழை பொய்த்த போதும், உணவு தானிய உற்பத்தி குறையவில்லை. தற்போது, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு, ஐந்து லட்சம் டன், அரிசி மற்றும் கோதுமை வழங்குகிறது. மத்திய தொகுப்பில் இருந்து, மேலும், 15 லட்சம் டன் உணவு தானியம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு, தாமஸ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|