தங்கம் விலை சவரனுக்கு ரூ.464 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.464 அதிகரிப்பு ... நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 281 கோடி டாலர் சரிவு நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 281 கோடி டாலர் சரிவு ...
நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.86 ஆயிரம் கோடி:11 மாதங்களுக்குப் பிறகு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
01:00

மும்பை: உள்நாட்டு நிதி நிறுவனங்கள், பங்குகளில் @மற்கொண்ட நிகர முதலீடு, கடந்த 11 மாதங்களுக்குப் பிறகு, நடப்பு ஜூன் மாதத்தில், முதன் முறையாக, 86 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.நடப்பு ஜூன் மாதம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. அதே சமயம், இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு
விற்பனை, 9,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.காப்பீட்டு துறை:உள்நாட்டு நிதி நிறுவனங்களில், காப்பீட்டு துறையை சேர்ந்த நிறுவனங்கள், சென்ற மாதத்தில், இறுதி இரு வாரங்களில், அதிக அளவில் பங்குகளை வாங்கி உள்ளன.குறிப்பாக, எல்.ஐ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம், நடப்பு மாதத்தில், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிஉள்ளது.

அதே சமயம், இதேமாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 300 கோடி ரூபாய்மதிப்பிற்கு அதிகமான பங்குகளை விற்பனை செய்துள்ளன.உள்நாட்டு நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு அதிகரித்ததால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' அதிக வீழ்ச்சி காணாமல், தடுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஜூன் மாதம், "சென்செக்ஸ்', 1.8 சதவீதம் சரிவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுமற்றும் ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, உள்நாட்டு நிதி நிறுவனங்களின் நிகர முதலீடு, கடந்த 11 மாதங்களுக்குப் பிறகு, நடப்பு ஜூன் மாதம் அதிகரித்துள்ளது.
ரெப்@பா விகிதம்:குறிப்பாக, எரிவாயு விலையை உயர்த்தி நிர்ணயித்தது, நிலக்கரி துறையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றால், உள்நாட்டு நிதிநிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்வதை உயர்த்தி வருகின்றன என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்."ரிசர்வ் வங்கி, சென்ற 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல், "ரெப்போ' விகிதங்களை 1.25 சதவீதம் குறைத்துள்ளது.

இது மட்டுமின்றி, மிகச் சிறந்த நிறுவனங்களின் பங்குகள், குறைந்த விலையில் கிடைப்பதும், நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரிக்க காரணம்' என, முன்னணி காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உதாரணமாக, பொதுத் துறையை சேர்ந்த பாரத் மிகு மின் கழக நிறுவனத்தின் பங்கு, தற்@பாது, 13 சதவீதம் குறைந்த விலையில் கைமாறிக் கொண்டு உள்ளது.அது போன்று, டாட்டா மோட்டார்ஸ் (10.21 சதவீதம்), என்.டி.பி.சி., (6.93 சதவீதம்), கோல் இந்தியா (6.77 சதவீதம்) போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலையும், மிகவும் குறைந்துள்ளன.
இதனால், @மற்கண்ட நிறுவன பங்குகளின் பக்கம், உள்நாட்டு நிதி நிறுவனங்களின் பார்வை திரும்பியுள்ளது.பெரும்பாலான நிறுவனங்கள், தற்போது டிவிடெண்டை அறிவித்து வருகின்றன. இந்த சமயத்தில், அந்த நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவடைந்திருப்பது, காப்பீட்டு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. அதனால், அவை தாராளமாக பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன.
பரஸ்பர நிதி திட்டம்:அதே சமயம், பங்குச் சந்தை ஏற்றத்தின் போதும், வீழ்ச்சியின் போதும், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, அதிக அளவில் முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர்.இதனால், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதனால், அவற்றின் நிகர பங்கு முதலீடு குறைந்துள்ளது.நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமாக நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)