பதிவு செய்த நாள்
30 ஜூன்2013
01:08
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 281 கோடி டாலர் (16,017 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,784 கோடி டாலராக (16.41 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 98 கோடி டாலர் (5,586 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,065 கோடி டாலராக (16.57 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, அதிகரித்து வந்த, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில் சரிவடைந்து உள்ளது.கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 265 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு,25,843 கோடி டாலராக குறைந்துள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, மாற்றம் எதுவுமின்றி, 2,283 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 2.83 கோடி டாலர் குறைந்து, 437 கோடி டாலராகவும், சர்வதேசநிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 12.84 கோடி டாலர் சரிவடைந்து, 220 கோடி டாலராகவும் குறைந்துள்ளது.
நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில், இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடனுடன் (39 ஆயிரம் கோடி டாலர்) ஒப்பிடும் போது, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு (28,784 கோடி டாலர்), 74 சதவீதம் அளவிற்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி, புள்ளிவிவரத்தில் @மலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|