பதிவு செய்த நாள்
30 ஜூன்2013
01:12
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல், மேஆகிய இரு மாதங்களில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 1.81 @காடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு மாதங்களில், பட்ஜெட் மதிப்பீட்டின் அடிப்படையில், நிதிப்பற்றாக்குறை, 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த 2012-13ம் நிதி ஆண்டின், இதே காலத்தில், 27.6 சதவீதமாக இருந்தது.அதிக செலவினம், வருவாய் குறைவு ஆகிய காரணங்களால், நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதங்களில், மத்திய அரசின் வருவாய், பட்ஜெட் மதிப்பீட்டில், 3.3 சதவீதமாக உள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 5.5 சதவீதமாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 4.8 சதவீதம், அதாவது, 5.42 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டில், மத்திய அரசு குறிப்பிடத்தக்க அளவிற்கு செலவினங்களை குறைத்தது. இதையடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 4.89 சதவீதமாக குறைந்தது.நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், நிதிப்பற்றாக்குறை அதிகரித்திருப்பதன் மூலம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவினம் உயர்ந்திருப்பது தெரிகிறது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கையை எடுத்து வரும் மத்திய அரசு, பயன்தரத் தக்க அளவில், இச்செலவினங்கள் செய்யப்படுகின்றதா என்பதையும் கண்காணித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|