நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 281 கோடி டாலர் சரிவுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 281 கோடி டாலர் சரிவு ... நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடையும் நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடையும் ...
நிதி பற்றாக்குறை ரூ.1.81 கோடியாக உயர்வு:நடப்பு நிதியாண்டில் முதல் இரு மாதங்களில்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
01:12

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல், மேஆகிய இரு மாதங்களில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 1.81 @காடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு மாதங்களில், பட்ஜெட் மதிப்பீட்டின் அடிப்படையில், நிதிப்பற்றாக்குறை, 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த 2012-13ம் நிதி ஆண்டின், இதே காலத்தில், 27.6 சதவீதமாக இருந்தது.அதிக செலவினம், வருவாய் குறைவு ஆகிய காரணங்களால், நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதங்களில், மத்திய அரசின் வருவாய், பட்ஜெட் மதிப்பீட்டில், 3.3 சதவீதமாக உள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 5.5 சதவீதமாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 4.8 சதவீதம், அதாவது, 5.42 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டில், மத்திய அரசு குறிப்பிடத்தக்க அளவிற்கு செலவினங்களை குறைத்தது. இதையடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 4.89 சதவீதமாக குறைந்தது.நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், நிதிப்பற்றாக்குறை அதிகரித்திருப்பதன் மூலம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவினம் உயர்ந்திருப்பது தெரிகிறது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கையை எடுத்து வரும் மத்திய அரசு, பயன்தரத் தக்க அளவில், இச்செலவினங்கள் செய்யப்படுகின்றதா என்பதையும் கண்காணித்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)