நிதி பற்றாக்குறை ரூ.1.81 கோடியாக உயர்வு:நடப்பு நிதியாண்டில் முதல் இரு மாதங்களில்...நிதி பற்றாக்குறை ரூ.1.81 கோடியாக உயர்வு:நடப்பு நிதியாண்டில் முதல் இரு ... ... வட மாநிலங்களில் கனமழை:குன்னூரில் தேயிலை விற்பனை விறுவிறுப்பு வட மாநிலங்களில் கனமழை:குன்னூரில் தேயிலை விற்பனை விறுவிறுப்பு ...
நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:38

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த அரிசி ஏற்றுமதி, 6 சதவீதம் குறைந்து, 95 லட்சம் டன்னாக சரிவடையும் என்று, மதிப்பிடப்பட்டு உள்ளது. வியட்னாம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின், மலிவு விலை அரிசியை வாங்க, சர்வதேச வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது தான், இதற்கு காரணம்.பாசுமதி அரிசி:சென்ற, 2012ம் ஆண்டு, இந்தியா, ஒரு கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்தது.
நடப்பு நிதியாண்டில், பாசுமதி அல்லாத சாதாரண அரிசி ஏற்றுமதி, 15 சதவீதம் சரிவடைந்து, 55 லட்சம் டன்னாக குறையும் என, தெரிகிறது. அதே சமயம், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 14 சதவீதம் உயர்ந்து, 40 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில், மத்திய அரசு, நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை, அண்மையில் உயர்த்தியது.சாதாரண அரிசி ஏற்றுமதியில், அரைவேக்காட்டு அரிசியின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது.
சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில், இதன் ஏற்றுமதிக்கான ஒரு டன் அரிசியின் விலை, 435 டாலரில் இருந்து, 415 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.வியட்னாம், சர்வதேச சந்தையில், ஒரு டன் அரிசியை, 370 டாலருக்கு விற்பனை செய்கிறது. இதே வகையான அரிசியை, இந்தியா, 440 டாலருக்கு ஏற்றுமதி செய்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு, இந்தியா அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்கிறது.இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு வீழ்ச்சி காரணமாக, ஏற்றுமதியாளர்கள், அரிசி விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
உற்பத்தி:இதனால், இந்தியாவின் சாதாரண அரிசி ஏற்றுமதி, 40 லட்சம் டன்னாக குறையவும் வாய்ப்புள்ளது என, ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார். அதே சமயம், இந்தியாவின் பாசுமதி அரிசி உற்பத்தி, 60 லட்சம் டன்னில் இருந்து, 80 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இதனால் பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலக பாசுமதி சந்தையில், இந்தியா, 65 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான், எஞ்சிய பங்களிப்பை கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)