பதிவு செய்த நாள்
14 ஜூலை2013
01:29
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 456 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில், தங்கம் விலை உயர்ந்ததை அடுத்து, கடந்த வாரத்தில்,இதன் விலை அதிகரித்திருந்தது. சென்னையில்,நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,506 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,048 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 26,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு,மூன்று ரூபாய் உயர்ந்து,2,509 ரூபாய்க்கு விற்பனை யானது. சவரனுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 20,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 35 ரூபாய் உயர்ந்து, 26,835 ரூபாய்க்கு விற்பனையானது.
ஒரு கிராம் வெள்ளி, 44.10 ரூபாய்க்கும்,ஒரு கிலோ பார்வெள்ளி,41,215 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்ற திங்களன்று, ஒரு கிராம் தங்கம், 2,452 ரூபாய்க்கும்,ஒரு சவரன்,19,616 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 57 ரூபாயும், சவரனுக்கு, 456 ரூபாயும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|