குன்னூர் தேயிலை விற்பனையில் சரிவு நிலைகுன்னூர் தேயிலை விற்பனையில் சரிவு நிலை ... இந்திய மாம்பழங்களுக்குஅமெரிக்காவில் கிராக்கி இந்திய மாம்பழங்களுக்குஅமெரிக்காவில் கிராக்கி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தேயிலை ஏற்றுமதி 6 கோடி கிலோவாக அதிகரிப்பு:கைகொடுத்த ஈரான், சி.ஐ.எஸ்., நாடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
01:07

மும்பை:ஈரான் மற்றும் சி.ஐ.எஸ்., எனப்படும், ரஷ்யா, கஜகஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட, காமன்வெல்த் தனி நாடுகளில், இந்திய தேயிலைக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நடப்பு 2013ம் காலண்டர் ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 1.50 கோடி கிலோ அதிகரித்து, 5.97 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.ரூபாய் மதிப்பு:இது, சென்ற 2012ம் ஆண்டின், இதே காலத்தில் 4.47 கோடி கிலோவாக இருந்தது.இதே காலத்தில், தேயிலை விலை, கிலோவுக்கு, 1 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால், இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.தேயிலை வாரியம் அண்மையில் வெளியிட்ட அதன் மறுமதிப்பீட்டு புள்ளிவிவரத்தில், தேயிலைஉற்பத்தி, கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில், முறையே, 111.57 கோடி கிலோ மற்றும் 111.17 கோடி கி@லாவாக இருந்தது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் மாதத்தில், @தயிலை உற்பத்தி, 5.83 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது, மே மாதம் 2 சதவீதம் குறைந்துள்ளது. அ@த சமயம், இதே காலத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு, உலக நாடுகளின் பொருளாதார சுணக்க நிலையால், அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளாகாத, எகிப்து மற்றும் ஜெர்மனிக்கு, இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி அதிகரித்திருந்தது.மேற்கு ஆசியா மற்றும் காமன்வெல்த் தனி நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி, குறைந்துஇருந்தது.நடப்பாண்டு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளா தாரம், இயல்பு நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தோன்றியுள்ளன.
இதனால், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக, ஈரான் உடனான ஆசிய கரன்சி பரிவர்த்தனை நடைமுறைக்கு, ரிசர்வ் வங்கி, கடந்த 2010ம் ஆண்டு தடை விதித்தது.இதையடுத்து, இந்தியா - ஈரான் இடையிலான வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, இந்திய ரூபாயில் பெற்றுக் கொள்ள ஈரான் சம்மதித்தது.
கென்யா அது போன்று, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தொகையை, ஈரான் ரூபாயில் ‌செலுத்துவது என, முடிவானது.இந்த உடன்பாட்டால், கடந்த சில ஆண்டுகளாக, தொய்வடைந்திருந்த, ஈரான் நாட்டிற்கான இந்தியாவின் ‌தேயிலை ஏற்றுமதி, நடப்பாண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, ஆர்த்தடாக்ஸ் வகை தேயிலையை, ஈரான், ஈராக் மற்றும் ரஷ்யாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. சி.டி.சி., வகை @தயிலை, பாகிஸ்தான், எகிப்து மற்றும் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.கென்யாவில், நடப்பாண்டு, சி.டி.சி., வகை தேயிலை உற்பத்தி, மிகச் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதனால், சர்வதேச சந்தைகளுக்கான, கென்யாவின் @தயிலை ஏற்றுமதி உயரும். இது, இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளின் தேயிலை ஏற்றுமதிக்கு கடும் சவாலாக இருக்கும் என, திர்பார்க்கப்படுகிறது.ஈரான் மீண்டும், இந்தியாவின் சி.டி.சி., வகை தேயிலையை வாங்கத் துவங்கியுள்ளதால், இவ்வகை @தயிலை ஏற்றுமதி @மலும் அதிகரிக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)