பதிவு செய்த நாள்
15 ஜூலை2013
14:37
புதுடில்லி: வாடிக்கையாளர்கள் விவரம் சேகரிப்பு, பண மோசடி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக 22 வங்கிகளுக்கு அபராதம் விதிதித்து உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி, கோட்டாக் மஹிந்திரா, கனரா வங்கி, சிட்டி வங்கி, பீஎன்பி பரிபாஸ், பார்கிளேஸ், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா உள்ளிட்ட 22 வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை முறையாக சேகரிக்காதது, பண மோசடி தொடர்பான விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் ரூ. 49.50 கோடி , அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிகளை பின்பற்றாதது குறித்து ஏற்கனவே வங்கிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|