பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
03:23
புதுடில்லி:இந்தியாவில், டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை, நடப்பு 2013-14ம் நிதியாண்டில், 102 சதவீதம் வளர்ச்சி காணும் என, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது.தற்போதைய நிலையில், குறைந்த எடையில், மிகவும் எளிதாக எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையிலான கம்ப்யூட்டர்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து, உள்நாட்டில், நடப்பு நிதியாண்டில், டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதனை எடுத்துக்காட்டும் விதமாக, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 19 லட்சமாக இருந்த, டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை, நடப்பு நிதியாண்டில், 100 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு, 38.40 லட்சமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், டேப்லெட் கம்ப்யூட்டர்கள் விற்பனை, வெறும், 3.60 லட்சம் என்ற அளவிற்கே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதேசமயம், நடப்பு நிதியாண்டில், சாதாரண கம்ப்யூட்டர்களின் விற்பனை, 8 சதவீதம் என்ற அளவிற்கே அதிகரித்து, 1.12 கோடியிலிருந்து, 1.21 கோடியாக உயரும் என, எம்.ஏ.ஐ.டி., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|