பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
12:43
புதுடில்லி : இறக்குமதியைக் குறைக்கும் வகையில், ஆடம்பர பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி செய்வதற்கு பதிலாக அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு பின் மீண்டும் நிதியமைச்சராகி ஓராண்டு ஆன தினத்தின் போது சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இந்த வரி உயர்விற்கு குறிப்பிட்ட எந்த திட்டமும் இல்லை; தற்போது இந்த முறை தங்கத்தின் மீதான இறக்குமதியில் மட்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது; பற்றாக்குறையை தவிர்க்க இதனை மேலும் பல பொருட்களின் இறக்குமதியிலும் கையாள திட்டமிடப்பட்டுள்ளது; உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதின் மூலமும் அவசியம் இல்லாத சில ஆடம்பர பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இறக்குமதி அளவு குறைக்கப்படும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|