பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
23:52
புதுடில்லி: ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும், வட்டி மானியம், 2சதவீதத்தில் இருந்து, 3சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த்சர்மா தெரிவித்தார்.டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
ஏற்றுமதியாளர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், வட்டி மானியம், 1சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது. இச்சலுகை, மேலும் பல துறைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இவை தவிர, மேலும் பல திட்டங்களை அமல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, வரும் 27ம் தேதி, வர்த்தக வாரிய அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 1.4சதவீதம் குறைந்து, 7,246 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|