பதிவு செய்த நாள்
01 ஆக2013
00:02
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
சாதகமற்ற சர்வதேசநிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம்சரிவுடன் முடிவடைந்தன.மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
அதேசமயம், உலோகம், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 2.64 புள்ளிகள் குறைந்து, 19,345.70 புள்ளிகளில் நிலை பெற்றது.
வர்த்தகத்தின் இடையே,இப்பங்குச்சந்தையின் குறியீட்டுஎண், அதிகபட்சமாக,19,387.50 புள்ளிகள் வரையிலும்,குறைந்த பட்சமாக, 19,126.82 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிடஉதவும்30 நிறுவனங்களுள், என்.டி.பி.சி., எச்.டீ.எப்.சி பேங்க், ஐ.டி.சி., உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 13.05 புள்ளிகள்சரிவடைந்து, 5,742 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,752.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,675.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|