தென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி சரிவுதென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி சரிவு ... நாட்டின் பருத்தி ஏற்றுமதி1 கோடி பொதிகளாக இருக்கும் நாட்டின் பருத்தி ஏற்றுமதி1 கோடி பொதிகளாக இருக்கும் ...
வேம்பில் தயாராகும் பூச்சிக்கொல்லிகளுக்கு மவுசு கூடுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2013
01:46

அகமதாபாத்:வேப்பிலை, வேப்பங் கொழுந்து, வேப்பம் பழம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அதன் பயன்பாடு, பெருகி வருகிறது.வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லி மருந்து துறையின் சந்தை மதிப்பு, 100 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறை, ஆண்டுக்கு, 7 - 9 சதவீதம் வளர்ச்சி கண்டு வருவதாக, எக்சிம் பேங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு பொருள்:அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:வேம்பின் விதைகள் மற்றும் இதர பாகங்களில் இருந்து தயாரிக்கப்படும், "அசாடிரச்டின்' என்ற கூட்டுப் பொருள், இயற்கையான பூச்சிக் கொல்லிகளுக்கு உரிய குணங்களைக் கொண்டுள்ளது. இதை, பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் செயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, மாற்றாக பயன்படுத்தலாம்.கடந்த, 2011ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளின் சந்தை மதிப்பு, 130 கோடி டாலராக இருந்தது. இது, 2012 மற்றும் 2017ம் ஆண்டுக்கு இடையில், சராசரியாக, ஆண்டுக்கு, 15.8 சதவீதம் என்ற அளவிற்கு வளர்ச்சி கண்டு, 320 கோடி டாலாராக உயரும்.இது, எதிர்காலத்தில், வேம்பின் அடிப்படையிலான பூச்சிகொல்லி மருந்து துறை, மேலும் வளர்ச்சி காண துணை புரியும்.
விதிமுறைகள்:ஐரோப்பாவில், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு கடுமையான விதிமுறைகள் உள்ளதால், அங்கு, இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து சந்தை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.சென்ற, 2012ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து, வேம்பு விதைகள் உட்பட, வேம்பு அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதி, 57.30 லட்சம் டாலராக இருந்தது. இது, மொத்த வேம்பு பொருட்களின் ஏற்றுமதியில், 2.79 சதவீதமாகும்.அமெரிக்கா:அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகள், இந்தியாவில் இருந்து அதிக அளவில் வேம்பு சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்து கொள்கின்றன. கடந்த, 2011 - 12ம் நிதியாண்டில், அமெரிக்கா, 26.20 லட்சம் டாலர் மதிப்பிலான வேம்பு பொருட்களை இறக்குமதி செய்து, இப்பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஜப்பான், 2.80 லட்சம் டாலர் மதிப்பிலான, வேப்ப எண்ணெய் மற்றும் புண்ணாக்கையும், ஸ்பெயின் அதிக அளவில் வேம்பின் விதைகளையும் இறக்குமதி செய்துள்ளன.இந்தியாவில், 2 கோடி வேப்ப மரங்கள் உள்ளன. இவற்றில் இருந்து, ஆண்டுக்கு, 35 லட்சம் டன் என்ற அளவில் கிடைக்கும், வேப்பங்கொட்டைகள் மூலம், 7 லட்சம் டன் வேப்ப எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.வேப்ப எண்ணெய் உற்பத்தி வளம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இருந்தபோதிலும், அதில், 30 சதவீதம், அதாவது, 2.5 லட்சம் டன் என்ற அளவிற்கு தான் வேப்ப எண்ணெய் உற்பத்தி உள்ளது.
வேப்ப மரங்கள்:இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்டது வேப்ப மரம். இதை, எஸ்.டி.ஐ. டீ.என்.ஆர்.சி., என்ற சர்வதேச அமைப்பு, கடந்த 1992ம் ஆண்டு, ஆசியாவின் பல பகுதிகள், ஆப்ரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் பயிரிட்டது.ஆனாலும், இன்றளவில், உலகின் மொத்த வேப்ப மரங்களில், 60 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)