மத்திய அரசின் நடவடிக்கைகளால்...வர்த்தக பற்றாக்குறை 1,091 கோடி டாலராக சரிவுமத்திய அரசின் நடவடிக்கைகளால்...வர்த்தக பற்றாக்குறை 1,091 கோடி டாலராக சரிவு ... இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மீண்டும் எழுச்சி கண்டது பங்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
01:36

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளி மதிப்பு உயர்வு மற்றும் சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்கும் நிலையில், அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தாது என்ற, பாரக் ஒபாமாவின் அறிவிப்பு போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ‹டுபிடித்து காணப்பட்டது.இதையடுத்து, "சென்செக்ஸ்', 3.77 சதவீத உயர்வுடனும், "நிப்டி' 3.81 சதவீத அதிகரிப்புடனும் முடிவடைந்தன.
கடந்த, 17 மாதங்களில் இல்லாத அளவாக, சென்ற ஜூலையில், சீனாவின் தொழில்துறை உற்பத்தி வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், மோட்டார் வாகனம், மருந்து, பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 727.04 புள்ளிகள் அதிகரித்து, 19,997.10 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தக்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,012.69 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,444.66 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட, 27 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், டாக்டர் ரெட்டீஸ், எஸ்.பீ.ஐ., மற்றும் டி.சி.எஸ் ஆகிய, மூன்று நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 216.35 புள்ளிகள் உயர்ந்து, 5,896.75 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,904.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,738.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)