பதிவு செய்த நாள்
11 செப்2013
09:53
சென்னை: கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, தமிழகத்துக்கு, 1,500 கோடி ரூபாயை ஒதுக்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, நபார்டு வங்கியின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளர், லலிதா வெங்கடேசன் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் (2013-14) தமிழகத்தின் கிராமப்புற உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, 1,500 கோடி ரூபாய் தமிழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இதில், கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில், தானிய சேமிப்பு கிடங்குகள் கட்ட, 159 கோடி ரூபாய் தற்போது அளிக்கப்படுகிறது.இதுதவிர, ராமநாதபுரம் மாவட்டம், வைகை அணையின் குறுக்கே, 74 கோடி ரூபாயில், நான்கு அணைகள் கட்டவும், 31 மாவட்டங்களில், 332 கிராமப்புற சாலைகள் அமைக்க, 82.40 கோடி ரூபாயும் அளிக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், பல்வேறு கிராமப்புற திட்டங்களுக்கு, 1,500 கோடி ரூபாய் வரை, தமிழகத்துக்கு நிதி அளிக்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது . இந்நிதி, நபார்டு வங்கியின் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு, லலிதா வெங்கடேசன் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|