பதிவு செய்த நாள்
11 மார்2014
00:26
புதுடில்லி:பரஸ்பர நிதி நிறுவனங்கள், நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், சென்ற பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில், 10,319 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, அதிக அளவில் முதலீடுகள் வெளியேறியதே இதற்கு காரணம். அதே சமயம், இதே காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 4.43 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.கடந்த 11 மாதங்களில், முதல் ஒன்பது மாதங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளன. எனினும், ஆகஸ்ட் மாதத்தில், நிகர அளவில், 1,607 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.இந்நிறுவனங்கள், கடந்த அக்டோபர் மாதம், மிக அதிகமாக, 4,018 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|