பதிவு செய்த நாள்
31 மார்2014
17:59
புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை அறிவித்த பின்னர் முதன் முதலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்புக்கள் வலுவாக உள்ளன. எனவே, பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற நிலை ஏற்படவே ஏற்படாது. கடந்த 18 மாதங்களாக, பொருளாதார நிலையை நிலை நிறுத்தும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். செலவினங்களை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைககள் மூலம் தற்போது பொருளாதார வளர்ச்சி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், பண பற்றாக்குறையை கட்டுப்படுத்தியது மிகப் பெரிய சாதனையாகும். அதுமட்டுமல்லாமல், மூலதனத்தையும் அதிகப்படுத்தி உள்ளோம். அந்நிய செலவாணி கையிருப்பு 300 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிபற்றாக்குறையை குறைத்துள்ளோம். தங்கம் இறக்குமதி செய்வதில் இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்த ரிசர்வ் வங்கியுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|