வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ; அபராதம் கிடையாது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!! வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ; அபராதம் கிடையாது - ரிசர்வ் வங்கி ... ... ரிசர்வ் வங்கிக்கு தனியார் வங்கிகள் எதிர்ப்பு : சேவை கட்டணம் வசூலிக்க திட்டம் ரிசர்வ் வங்கிக்கு தனியார் வங்கிகள் எதிர்ப்பு : சேவை கட்டணம் வசூலிக்க ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
'வேறு வங்கி ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்தாதீர்': ஊழியர்களுக்கு எஸ்.பீ.ஐ., அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2014
15:16

புதுடில்லி: வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்க்குமாறு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), அதன் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வங்கி அதன் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், 'நமது வங்கியில் பணியாற்றிக் கொண்டு, வேறு வங்கிகளின் 'ஏ.டி.எம்.,'களை பயன்படுத்துவது நியாயமா? இதை தவிர்க்க முடியாதா? இது நமது பெருமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?' என, அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வங்கியின் ஒருங்கிணைந்த ஏ.டி.எம்., சேவையை அனைத்து ஊழியர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம், வங்கி நிர்வாகத்துடனான உறவு வலுப்படும். இதனால், பிற ஏ.டி.எம்., பயன்பாட்டிற்கு, குறிப்பாக, போட்டி வங்கிகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் செல்வது தடுக்கப்படும் என, எஸ்.பீ.ஐ., தெரிவித்துள்ளது.
கடந்த, 2013ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, எஸ்.பீ.ஐ., பணியாளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 23 ஆயிரத்து 675 ஆக உள்ளது. இவர்களுள் பல ஊழியர்கள், பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் மூலம், மாதம், சராசரியாக 2.80 லட்சம் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த வகையில், வங்கிக்கு, மாதந்தோறும் வரிகள் நீங்கலாக, 42 லட்சம் ரூபாய் செலவாகிறது. வேறு வங்கியின் ஏ.டி.எம்.,ஐ ஒரு முறை பயன்படுத்தினால், அந்த வங்கிக் கிளைக்கு, 15 ரூபாய் அளிக்க வேண்டியுள்ளது. இதனால், எஸ்.பீ.ஐ., அதன் லாபத்தில், ஆண்டுக்கு, 5 கோடி ரூபாயை இழக்கிறது. இதை தடுக்கும் நோக்கில், எஸ்.பீ.ஐ., அதன் ஊழியர்களுக்கு மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளது. அதிக அளவில் வசூலாகாத கடனை கொண்டுள்ள எஸ்.பீ.ஐ., அதன் செலவினங்களை குறைக்க, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)