பதிவு செய்த நாள்
09 ஏப்2014
14:37
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் பல்வேறு கிளைகளில், கடந்த பல ஆண்டுகளாக ரூ.10 கோடிக்கும் மேலான கள்ளநோட்டுகள் டெபாசிட்டு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐசிஐசிஐ சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2014ம் ஆண்டு வரை உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களில் உள்ள பல ஐசிஐசிஐ வங்கி கிளைகளில் ரூ.10.77 கோடி கள்ளநோட்டு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஹஸ்ரட்கஜ் பகுதி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கியின் மண்டப தலைவர் மணிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலங்களிலேயே அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் கள்ள நோட்டுக்களை கண்டறியும் பணியின் போது கள்ளநோட்டுக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கள்ளநோட்டுக்கள் மற்றும் சேதமடைந்த நோட்டுக்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. தற்போது ஐசிஐசிஐ வங்கியில் அதிக அளவில் கள்ளநோட்டுக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதை அடுத்து, இந்த பணி மேலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கள்ள நோட்டுக்கள் புழங்குவதை கண்காணித்து அனைத்து வங்கிகளும் அறிக்கை அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. மேலும் கள்ளநோட்டுக்கள் குறித்த விபரங்களை ரிசர்வ் வங்கி, போலீஸ் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|