பதிவு செய்த நாள்
15 ஏப்2014
16:51
மும்பை : பணவீக்கம் அதிகரிப்பாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 144.03 புள்ளிகள் சரிந்து 22,484.93-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 43.20 புள்ளிகள் சரிந்து 6,733.10-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் விலை சரிந்தன. குறிப்பாக எஸ்பிஐ., ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பெல், ஹிண்டால்கோ, ஐடிசி., உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம் ஐ.டி. துறை பங்குகளான டிசிஎஸ்., விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவன பங்குகள் நல்ல லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|