பதிவு செய்த நாள்
18 ஏப்2014
09:20
நாசிக் : போதிய மழை இல்லாததால், வெங்காய உற்பத்தி குறைந்து விட்டதால் மொத்த விலை சந்தையில் கடந்த ஒரே வாரத்தில் வெங்காயத்தின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக லாசல்கான் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி ரூ.575 முதல் ரூ.801 வரை இருந்த ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை, ஏப்ரல் 17 அன்று ரூ.750 முதல் ரூ.1011 வரை என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. சில்லரை விற்பனை சந்தையில் ஒரு கிலோ தரமான வெங்காயத்தின் விலை ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது.
காலம் தவறிய மழை காரணமாக வெங்காயங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயத்தின் விலை திடீரென கடுமையாக உயர்வதும், பின் சரிவதும் வெங்காய விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|