பதிவு செய்த நாள்
21 ஏப்2014
10:50
மும்பை : உலோகம், மின் உற்பத்தித்துறை, சரக்கு போக்குவரத்து, வங்கித்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததன் காரணமாக வாரத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 21) இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காரணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 76.30 புள்ளிகள் உயர்ந்து 22,705 புள்ளிகளாகவும், நிப்டி 26.10 புள்ளிகள் அதிகரித்து 6805.50 புள்ளிகளாகவும் இருந்தன.
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று துவங்கிய இந்திய பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றமான நிலை முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் உள்ளிட்ட ஆசிய சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. ஹாங்காங்கில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|