பதிவு செய்த நாள்
22 ஏப்2014
14:15
சென்னை: மீன்பிடி தடையால், வரத்து குறைந்து, தமிழகம் முழுவதும் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மீன் விலை, வழக்கத்தை விட, 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மீன்களின் இன விருத்தியைக் கருத்தில் கொண்டு, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில், ஏப்., 15 முதல், 45 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுமரம், பைபர் படகுகள் மட்டுமே மீன் பிடிக்கச் செல்கின்றன. இதன் மூலம், தேவையில், பத்தில் ஒரு பங்கே கிடைக்கிறது. தடைக்கு முன் வந்த விசைப்படகுகளில் இருந்த மீன்களும், நான்கு நாட்களில் தீர்ந்து விட்டதால், இரண்டு நாட்களாக மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழகத்தில் மீன் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த வாரத்தில், 1,200 ரூபாய்க்கு விற்ற முதல் ரக இறால், 1,300 ரூபாய்; 350 ரூபாய்க்கு விற்ற, இரண்டாம் ரக இறால், 450 ரூபாய்; 550 ரூபாய்க்கு விற்ற, முதல் ரக வஞ்சிரம், 720 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற, இரண்டாம் ரக வஞ்சிரம், 430 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. முன், 150 ரூபாய்க்கு விற்ற நண்டு, 200 ரூபாய்; 200 ரூபாய்க்கு கிடைத்த சீலா, 280 ரூபாய் என அதிகரித்திருக்கிறது.
ஞாயிறு என்றால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். நேற்று குறைந்த அளவிலான ஆட்களே வந்தனர். எகிறிய விலையைப் பார்த்து, துக்கடா மீன்களை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'தடையால், மீன் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. மே மாதம் வரை, அசைவ பிரியர்கள் கொஞ்சம், மீன் ருசிப்பதை மறக்க வேண்டியது தான். வெளிமாநில மீன்கள் வந்தாலும், தேவை அதிகம் உள்ளதால், விலை குறைய வாய்ப்பில்லை' என்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|