பதிவு செய்த நாள்
22 ஏப்2014
17:48
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(ஏப்ரல் 22ம் தேதி) புதிய உச்சத்தை தொட்டநிலையில், லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், இறுதியில் சிறிய சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ் 22,812.36 புள்ளிகளுடனும், நிப்டி 6,827.20 புள்ளிகளுடனும் ஆரம்பித்து புதிய உச்சத்தை தொட்டன. அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், முக்கிய நிறுவன பங்குகளின் விலை உயர்வால் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் இருந்தன. ஆனால் வர்த்தகநேர முடிவின்போது முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்றதால் இந்திய பங்குசந்தைகள் சிறு சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவின் போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 6.46 புள்ளிகள் சரிந்து 22,758.37-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 2.30 புள்ளிகள் சரிந்து 6,815.35-ஆகவும் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 22,853.03 புள்ளிகள் வரையும், நிப்டி 6,838 புள்ளிகள் வரையும் சென்றன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 12 நிறுவன பங்குகள் விலை உயர்வுடனும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, ஐடிசி., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி, டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குககள் விலை பெரும் சரிவை சந்தித்தன. அதேசமயம், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், எல்அண்ட்டி., எச்டிஎப்சி., போன்ற பங்குகள் நல்ல லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|