பதிவு செய்த நாள்
24 ஏப்2014
00:55
தென்னிந்தியாவில் மிளகு உற்பத்தி, சரிவடைந்துள்ளதால், கடந்த இரண்டு வாரங்களில் அதன் விலை, 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
கொச்சி, மொத்த விற்பனை மிளகுச் சந்தையில், ஒரு கிலோ, சுத்தப்படுத்தப்பட்ட மிளகு விலை, 670–680 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, வரும் வாரங்களில், 700 ரூபாய் வரை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உற்பத்தி குறைவால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை விவசாயிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதிக அளவில் மிளகை இருப்பு வைக்கத் துவங்கிஉள்ளனர். இதனால், வரும், ஜூன் – ஜூலை மாதங்களில், ஒரு கிலோ மிளகு, 1,000 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தி யில், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பங்களிப்பு, 90 சதவீதமாக உள்ளது. டிசம்பர் முதல் மார்ச் வரை, மிளகு அறுவடை காலமாகும். இக்காலத்தில், மிளகு மகசூல், 50 ஆயிரத்தில் இருந்து, 60 ஆயிரம் டன் வரை இருக்கும்.ஆனால், நடப்பாண்டு, மிளகு உற்பத்தி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 40 சதவீதம் குறைந்து, 35 ஆயிரம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச மிளகு உற்பத்தியில், வியட்னாம் 40 சதவீதமும், இந்தியா, 20– 25 சதவீத பங்களிப்பையும் கொண்டு உள்ளன. உள்நாட்டு மிளகு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்ற மார்ச் மாதம், வியட்னாமில் இருந்து, 1,600 டன் மிளகு இறக்குமதி செய்யப்பட்டது.
தமிழக வியாபாரிகள், மிளகு விளையும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளிடம் கிலோ, 650–700 ரூபாய் வீதம், மிளகை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், கொச்சி உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் மிளகு வரத்து குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|