பதிவு செய்த நாள்
24 ஏப்2014
00:57
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையை (ஐ.டி.,) சேர்ந்த நிறுவனப் பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு, 24,315 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இது, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிறுவனங்கள் நிர்வகித்து வரும், ஒட்டு மொத்த சொத்து மதிப்பில் (2.04 லட்சம் கோடி ரூபாய்), 11.92 சதவீதமாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்து உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், ஐ.டி., துறை நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, எப்போதும் இல்லாத வகையில், 28,784 கோடி ரூபாய் என்ற அளவில், மிகவும் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வலுவடைந்து வருவதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின், ஏற்றுமதி வருவாய் பாதிப்புக்குள்ளாகும் என, மதிப்பிடப் பட்டு உள்ளது.
இதன் காரணமாகவே, கணக்கீட்டு மாதத்தில், இத்துறை நிறுவனங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு, வெகுவாக சரிவடைந்து உள்ளது.ஐ.டி., துறை நிறுவனப் பங்கு களில், முதலீடு குறைந்துள்ள நிலையில், வங்கி துறை பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், மிகவும் அதிகபட்சமாக, 40,293 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.இதையடுத்து, மருந்து துறை (16,066 கோடி ரூபாய்), நுகர்வோர் சாதனங்கள் சாராத இதர துறை (12,947 கோடி ரூபாய்) மற்றும் பெட்ரோலிய பொருட்கள் துறை (10,909 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனப் பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|