பதிவு செய்த நாள்
24 ஏப்2014
01:08
ஐதராபாத்:வரும் 2019–2020ம் நிதி ஆண்டிற்குள், இந்தியாவின் பால் உற்பத்தி, 17.70 கோடி
டன்னாக அதிகரிக்கும் என, ‘அசோசெம்’ அமைப்பின் தேசிய பொது செயலர் டீ.எஸ்.ராவத்
தெரிவித்தார்.உள்நாட்டில், பால் உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, பால் உற்பத்தியின், ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி, 4 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
மதிப்பீடு:இந்த வளர்ச்சி, வரும் 2016–17ம் நிதியாண்டிற்கு மதிப்பிடப்பட்டு உள்ள பாலுக்கான தேவையை (15 கோடி டன்) பூர்த்தி செய்ய உதவும்.கடந்த 2006 முதல் 2010 வரையிலான ஐந்தாண்டு காலத்தில், ஆந்திராவில், பால் உற்பத்தி மற்றும் தனிநபர் பால் நுகர்வு முறையே, 41 சதவீதம் மற்றும் 36 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
ஆந்திரா:நாட்டின் ஒட்டு மொத்த பால் உற்பத்தியில், ஆந்திரா, ராஜஸ்தான் (28 சதவீதம்), கேரளா (24 சதவீதம்), கர்நாடகா (24 சதவீதம்) மற்றும் குஜராத் (23.7 சதவீதம்) ஆகிய ஐந்து
மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.கடந்த 2010–11ம் நிதியாண்டில், நாடு தழுவிய அளவில் பால் உற்பத்தி, 12.10 கோடி டன்னை தாண்டியுள்ளது.
தனிநபர் பால் நுகர்வு:உற்பத்தி சிறப்பாக அதிகரித்து வரும் அதேவேளையில், இந்தியாவில் தனிநபர் பால் நுகர்வு, 252 கிராம் என்ற குறைந்த அளவில் உள்ளது. இது, சர்வதேச சராசரி
அளவான, 279 கிராமை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.உலகளவில் தனிநபர் பால் நுகர்வில், நியூசிலாந்து (9,773 கிராம்) முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, அயர்லாந்து
(3,260 கிராம்), டென்மார்க் (2,411 கிராம்) ஆகிய நாடுகள் உள்ளன என, ராவத் மேலும்
தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|