பதிவு செய்த நாள்
25 ஏப்2014
00:47
புதுடில்லி:நடப்பு 2014 – 15ம் (ஜூலை – ஜூன்) பயிர் பருவத்தில், கொள்முதல் செய்யப்படும் நெல், பருத்தி, துவரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.,) குவிண்டாலுக்கு, 50 ரூபாய் உயர்த்த, மத்திய வேளாண் அமைச்சகம் பரிந்துரை செய்து உள்ளது.
இதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டாலுக்கு, 50 ரூபாய் உயர்த்தி, 1,360 ரூபாயாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இது தவிர, நடுத்தர வகை மற்றும் நீள் வகை பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டாலுக்கு, தலா 50 ரூபாய் உயர்த்தி, 3,750 மற்றும் 4,050 ரூபாயாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும்,கேழ்வரகு, மக்காச்சோளம் மற்றும் பாசிப்பருப்பிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டாலுக்கு முறையே, 50 ரூபாய், 30 ரூபாய் மற்றும் 100 ரூபாய் என்ற அளவில் உயர்த்த, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, எள் மற்றும் சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முறையே, 100 மற்றும் 50 ரூபாய் உயர்த்த வேளாண் அமைச்சகம், பரிந்துரை செய்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|