பதிவு செய்த நாள்
25 ஏப்2014
00:57
சென்னை:மக்கள், தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்க, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஓட்டு போடுவது ஒவ்வொருவரின் கடமை என்பதை விளக்கும் விளம்பர தட்டிகள், சுவரொட்டிகள், ஊடக விளம்பரங்கள், குறுந்தகடுகள் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளது.
விழிப்புணர்வு:சமூக பொறுப்புணர்வுள்ள பல தனியார் நிறுவனங்களும், வாக்களிப்பின் முக்கியத்து வத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டன. அதே சமயம், சில நிறுவனங்கள், அவற்றின் வர்த்தகத்தை அதிகரித்துக் கொள்ள, இந்த பிரசார உத்தியை பயன்படுத்திக் கொண்டுள்ளன.
இந்நிறுவனங்கள், வாக்களித்ததற்கு சான்றாக, கை விரலில் உள்ள அடையாள மையை காண்பிப்போருக்கு, சலுகை விலையில் பல்வேறு பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்த வகையில், சென்னையை சேர்ந்த சிகை அழகு நிறுவனமான லேக்மி சலுான், கை விரலில் அடையாள மையை காண்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, 50 சதவீத சலுகை விலையில் சிகை அலங்காரம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இச்சலுகை வரும், 30ம் தேதி வரை கிடைக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அது போன்று, நேச்சுரல்ஸ் லவுன்ஜ் நிறுவனம், தேர்தல் நாளன்று, அதன் அனைத்து விதமான அழகு பராமரிப்பு சேவைகளுக்கான கட்டணத்தில், 20 சதவீதம் தள்ளுபடி வழங்கியது. எப்.பீ.பீ., விற்பனையகங்களில், தேர்தல் நாளை முன்னிட்டு, நேற்று, பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளின் விலையை, 10 சதவீதம் குறைத்தது.‘ஆன் – லைன்’ வாடிக்கையாளர்கள்கேக் வேர்ல்டு நிறுவனம், அதன் அனைத்து வகை 'கேக்'குகளின் விலையில், 15 சதவீதம் தள்ளுபடி செய்துள்ளது. அயனாவரத்தில் உள்ள ராஜா சிக்கன் அண்டு மட்டன் சென்டர், ஒரு கிலோ கோழிக்கறி விலையில், 20 ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள பிராஸ் டேக்ஸ் நிறுவனம், பலதரப்பட்ட ஆடைகளின் விலையில், 10 சதவீதம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்நிறுவனம், கை விரலில் அடையாள மை உள்ளதை படமெடுத்து அனுப்பும் ‘ஆன் – லைன்’ வாடிக்கையாளர்களுக்கு, விற்பனை விலையில், 15 சதவீத தள்ளுபடி வழங்குகிறது. இச்சலுகை, வரும் மே மாதம் 1ம் தேதி வரை கிடைக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மெக்டொனால்டுஸ் நிறுவனம், அதன், ‘ராயல் மீல்’ பர்கர் வாங்குவோருக்கு, வரும் 27ம் தேதி வரை, ‘மெக்ப்ளரி’ ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனம், அடையாள மையை காண்பித்து, 1,000 ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை வாங்கும் வாடிக்கையாளருக்கு, இலவசமாக துண்டை வழங்குகிறது. இச்சலுகை, வரும், 30ம் தேதி வரை அமலில் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னணு சாதனங்கள்:உங்ளியுதோடிஸ்கவுன்ட்பா.காம் என்ற இணைதளத்தில், ஆடைகள், விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவோருக்கு, வரும், 27ம் தேதி வரை, கவர்ச்சிகரமான தள்ளுபடி காத்திருக்கிறது.இது போன்று இந்தியா முழுவதும் பல நிறுவனங்கள், தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில், அவற்றின் வர்த்தகத்தை அதிகரித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|