பதிவு செய்த நாள்
30 மே2014
00:32
புதுடில்லி :இந்திய மென் பொருள் சந்தை, சென்ற 2013ம் ஆண்டில், 9.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22,680 கோடி ரூபாயாக (378 கோடி டாலர்) உயர்ந்துஉள்ளது என, ஐ.டீ.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான சூழல், ரூபாய் மதிப்பு சரிவு, அரசு துறை முதலீடுகளில் லாபம் குறைந்தது போன்றவற்றால், சென்ற ஆண்டு, இந்திய மென்பொருள் சந்தை வளர்ச்சி மந்தமாகவே இருந்தது.இருப்பினும், அடுத்த ஐந்து ஆண்டு களில் (2014–18), இந்திய மென்பொருள் துறை, ஆண்டுக்கு சராசரியாக, 10.3 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டில், வங்கி, தொலைத் தொடர்பு, ஊடகம், மற்றும் தயாரிப்பு துறைகள், மென்பொருட்களுக்கு அதிகம் செலவு செய்துள்ளன.மதிப்பீட்டு ஆண்டில், இந்திய மென்பொருள் சந்தையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், 30 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, ஆரக்கிள் (11.9 சதவீதம்), சாப் (7.9 சதவீதம்), ஐ.பீ.எம்., (6 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
உலகளவில், இந்திய மென்பொருள் வல்லுநர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனினும் தற்போது பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|