பதிவு செய்த நாள்
02 ஜூன்2014
00:18
புதுடில்லி:வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:இடர்பாடுகளை குறைக்கும் வகையில், கடன் வழங்கும் உள்கட்டமைப்பு முறைகளை, வங்கிகள், வலுப்படுத்த வேண்டும்.சென்ற 2013ம் ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய மொத்த கடனில், வசூலாகாத கடன், 10.13 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கவலைக்குரியது. அதிகரித்து வரும் வசூலாகாத கடன், வங்கி துறைக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. பொருளாதார சுணக்க நிலையும், வசூலாகாத கடன் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளது.
சென்ற ஆண்டு மார்ச்சில், 1.55 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடன், செப்டம்பர் இறுதியில், 2.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|