பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
00:32
சென்னை;சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வர்த்தகம், 14.08 சதவீதம் வளர்ச்சி கண்டு, 77,984 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இதில், இவ்வங்கி திரட்டிய டிபாசிட், 13.21 சதவீதம் உயர்ந்து, 43,758 கோடியாகவும், வழங்கிய கடன்கள், 15.22 சதவீதம் அதிகரித்து, 34,226 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 14.72 சதவீதம் உயர்ந்து, 1,848 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1,611 கோடியாக இருந்தது.இதர வருவாய், 24.72 சதவீதம் வளர்ச்சி கண்டு, 453 கோடியிலிருந்து, 564 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர லாபம், 21.94 சதவீதம் சரிவடைந்து, 550 கோடியிலிருந்து, 430 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள, அதிக தொகை ஒதுக்கியது தான், நிகர லாப சரிவிற்கு முக்கிய காரணம் என, இவ்வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|