சரக்கு மற்றும் சேவைகள் வரியால் நிதி பற்றாக்குறை குறையும்: கிரிசில்சரக்கு மற்றும் சேவைகள் வரியால் நிதி பற்றாக்குறை குறையும்: கிரிசில் ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.60.13 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.60.13 ...
வெளி சந்தைக்கு வருகிறது 50 லட்சம் டன் அரிசி : விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2014
00:29

மும்பை ;மத்திய அரசு, அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் உபரி அரிசி கையிருப்பில் இருந்து, 50 லட்சம் டன் அரிசியை, வெளிச் சந்தைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன் மூலம், அரிசி விலை, கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்:கடந்த மே மாதம், மொத்த விலை பணவீக்கம், 6.01 சதவீத மாக உயர்ந்தது. இதையடுத்து, அரிசி, கோதுமை, பருப்பு, காய்கறிகள், சர்க்கரை, பால், சமையல் எண்ணெய் உள்ளிட்ட, 22 உணவுப் பொருட்களின் விலையை, மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, முதல் நடவடிக்கையாக, உயர்ந்து வரும் அரிசி விலையை குறைக்கும் நோக்கில், இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள உபரி அரிசியில், 50 லட்சம் டன் வெளிச் சந்தைக்கு அனுப்பப்பட உள்ளது.இந்த அரிசி விலையை நிர்ணயம் செய்வது, ஒப்பந்த புள்ளி கோருவது உள்ளிட்ட பணிகளை, மத்திய வேளாண் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.நடப்பு ஜூன் மாத துவக்க நிலவரப்படி, மத்திய அரசின் முகமை அமைப்பான இந்திய உணவுக் கழகம் வசம், 2.82 கோடி டன்னிற்கும் அதிகமான அரிசி கையிருப்பில் உள்ளது. இதில், 76 லட்சம் டன் நெல், அரவைக்காக, ஆலைகளிடம் காத்திருக்கின்றன.
அரவை கட்டணம்:தற்போது, ஒரு குவிண்டால் அரிசிக்கான கொள்முதல் செலவு, 2,410 ரூபாயாக உள்ளது. இதில், ஒரு குவிண்டால் நெல் கொள்முதலுக்கு, 1,910 ரூபாயும், ‘வாட்’ வரி மற்றும் அரவை கட்டணம் ஆகியவற்றுக்கு முறையே, 222 ரூபாய் மற்றும், 38 ரூபாயும் செலவாகிறது. இத்துடன், இதர கையாளும் செலவினங்களும் உள்ளன.
உபரி கோதுமை:நடப்பு 2013 – 14ம் சந்தைப் பருவத்தில் (அக்., – செப்.,), சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 1,301 ரூபாயாக உள்ளது. இத்துடன், போக்குவரத்து செலவு, கிடங்கு கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளையும் சேர்த்தால், ஒரு குவிண்டால் அரிசியின் விலை, 2,755 ரூபாய் என்ற அளவிற்கு வருகிறது.இதன் அடிப்படையில், ஒரு குவிண்டால் அரிசியின் வெளிச் சந்தை விலை தீர்மானிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, இந்திய உணவுக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக, உபரி கோதுமை, வெளிச் சந்தையில், மொத்த விலையில், வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு களில், தற்போது தான், மத்திய அரசு, இந்த அளவிற்கு அரிசியை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது.கடந்த, 1994 – 95ம் ஆண்டு, இந்திய உணவுக் கழகம், சிறிய அளவில், வெளிச் சந்தையில் அரிசி விற்பனையை மேற்கொண்டது. மாநில அரசு:அதே சமயம், கடந்த, 2012 – 13 மற்றும் 2013 – 14ம் சந்தை பருவங்களில், மத்திய அரசு, மாநில அரசுகளின் வெளிச் சந்தை விற்பனைக்கு, முறையே, 1.40 லட்சம் டன் மற்றும், 2.40 லட்சம் டன் அரிசியை நேரடியாக ஒதுக்கியது. ஆனால், அவற்றை மாநில அரசுகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)