பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
09:43
மும்பை : இருதினங்களாக ஏற்றம் கண்டு வந்த ரூபாயின் மதிப்பு இன்று(ஜூலை 10ம் தேதி) சரிவை சந்தித்தது. வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 59.63 ஆக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கியதாலும், சர்வதேச சந்தையில் ஏற்றுமதியாளர்களிடையே டாலர் அதிகம் விற்பனை செய்யப்பட்டதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து இருந்தது. அதன்பின் பட்ஜெட்டால் பங்குசந்தைகளில் அதிக ஏற்றமும்-இறக்கமும் இருந்தது, பின்னர் சரிந்தது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்தது. வர்த்தகநேர முடிவில் ரூபாயின் மதிப்பு 44 காசுகள் சரிந்து ரூ.60.19-ஆக முடிந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு 59.75 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|