இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி -ரூ.60.19இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி -ரூ.60.19 ... தங்கம் விலை அதிரடியாக ரூ.440 உயர்வு தங்கம் விலை அதிரடியாக ரூ.440 உயர்வு ...
வருமானவரி உச்சவரம்பு அதிகரிப்பு! பட்ஜெட் தாக்கல்!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2014
15:59

புதுடில்லி : 2014-15-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தார். மோடியின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதன்படி வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது, புகையிலை தொடர்பான பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து ஜெட்லி கூறியதாவது, நாட்டின் பொருளாதாரம் மந்தமாக ‌உள்ளது. ஆனால் தற்போது உலக பொருளாதாரம் சாதகமான சூழல் நிலவுவதால் பொருளாதாரம் முன்னேற்றம் பெறும். நிதிநிலையில் எச்சரிக்கை தேவை. மானியங்கள் அரசுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இத்தகைய சூழலில் இதை எதிர்‌கொள்வது சவாலானது தான். நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 4.1 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் துறைகளை வலுப்படுத்த நடவடிக்கை தேவை. உற்பத்தி துறை மற்றும் உள்கட்டமைப்பு துறையில் வளர்ச்சி காண்பது அவசியமாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி 7 முதல் 8 சதவீதமாக உயரும்.
* வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக அதிகரிப்பு.
* சிறிய ரக கலர் டி.வி.க்கள் விலையும் குறையும்.
* சிகரெட், பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை தொடர்பான வரி பொருட்களுக்கு தகுந்தவாறு 11 முதல் 72 சதவீதம் வரை உயர்வு.
* குழந்தைகள் மற்றும் பெண்கள் நல பாதுகாப்புக்கு சுமார் ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* ரூ.500 கோடி மதிப்பில் ஆந்திரா, மே.வங்கம், விதர்பா மற்றும் புரவஞ்சாலில் மேலும் 4 ஏ‌ய்ம்ஸ் அமைக்க ஒதுக்கீடு.
* ரூ.500 மதிப்பில், 5 ஐஐடி மற்றும் ஐஐஎம் அமைக்க நிதி ஒதுக்கீடு.
* மதரசாக்களை நவீனப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* விவசாய துறைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. தெலுங்கானா மற்றும் அரியானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை.
* புதிதாக 16 துறைமுகம் அமைக்க நடவடிக்கை.
* விமான நிலையங்களை நவீனமயமாக்க நடவடிக்கை.
* வடகிழ்கு மாநிலங்களில் ச‌ாலை வசதி மேம்படுத்த நடவடிக்கை.
* அலகாபாத் - ஹல்தியா கங்கா நதிநீர் திட்டம் அறிவிப்பு
* சுரங்க தொழில் கூடுதல் முதலீடு செய்ய நடவடிக்கை.
* பாதுகாப்பு துறைக்கு ரூ.2.29 லட்சம் கோடி ஒதுக்கீடு
* தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* வெளிநாட்டு நிதியுதவியுடன் கங்கை நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை.
* விளையாட்டுத்துறைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு. குறிப்பாக மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ஒதுக்கீடு.
* 2014-15-ல் பொதுத்துறை பங்குகள் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)