பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
15:59
புதுடில்லி : 2014-15-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தார். மோடியின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதன்படி வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது, புகையிலை தொடர்பான பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து ஜெட்லி கூறியதாவது, நாட்டின் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. ஆனால் தற்போது உலக பொருளாதாரம் சாதகமான சூழல் நிலவுவதால் பொருளாதாரம் முன்னேற்றம் பெறும். நிதிநிலையில் எச்சரிக்கை தேவை. மானியங்கள் அரசுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இத்தகைய சூழலில் இதை எதிர்கொள்வது சவாலானது தான். நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 4.1 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் துறைகளை வலுப்படுத்த நடவடிக்கை தேவை. உற்பத்தி துறை மற்றும் உள்கட்டமைப்பு துறையில் வளர்ச்சி காண்பது அவசியமாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி 7 முதல் 8 சதவீதமாக உயரும்.
* வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக அதிகரிப்பு.
* சிறிய ரக கலர் டி.வி.க்கள் விலையும் குறையும்.
* சிகரெட், பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை தொடர்பான வரி பொருட்களுக்கு தகுந்தவாறு 11 முதல் 72 சதவீதம் வரை உயர்வு.
* குழந்தைகள் மற்றும் பெண்கள் நல பாதுகாப்புக்கு சுமார் ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* ரூ.500 கோடி மதிப்பில் ஆந்திரா, மே.வங்கம், விதர்பா மற்றும் புரவஞ்சாலில் மேலும் 4 ஏய்ம்ஸ் அமைக்க ஒதுக்கீடு.
* ரூ.500 மதிப்பில், 5 ஐஐடி மற்றும் ஐஐஎம் அமைக்க நிதி ஒதுக்கீடு.
* மதரசாக்களை நவீனப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* விவசாய துறைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. தெலுங்கானா மற்றும் அரியானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை.
* புதிதாக 16 துறைமுகம் அமைக்க நடவடிக்கை.
* விமான நிலையங்களை நவீனமயமாக்க நடவடிக்கை.
* வடகிழ்கு மாநிலங்களில் சாலை வசதி மேம்படுத்த நடவடிக்கை.
* அலகாபாத் - ஹல்தியா கங்கா நதிநீர் திட்டம் அறிவிப்பு
* சுரங்க தொழில் கூடுதல் முதலீடு செய்ய நடவடிக்கை.
* பாதுகாப்பு துறைக்கு ரூ.2.29 லட்சம் கோடி ஒதுக்கீடு
* தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* வெளிநாட்டு நிதியுதவியுடன் கங்கை நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை.
* விளையாட்டுத்துறைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு. குறிப்பாக மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ஒதுக்கீடு.
* 2014-15-ல் பொதுத்துறை பங்குகள் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|