பதிவு செய்த நாள்
11 ஜூலை2014
17:18
மும்பை : பங்கு வர்த்தகத்தில், வாரத்தின் கடைசிநாளான இன்று, இந்திய பங்குசந்தைகள் ஆட்டம் கண்டன, சென்செக்ஸ் 348 புள்ளிகள் சரிந்தது, நிப்டி 7500 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் பங்குசந்தைகளுக்கு மோசமான வாரமாக அமைந்தது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போது பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தான் துவங்கின. குறிப்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் முதல்காலாண்டு நிதிநிலை அறிக்கை உயர்ந்ததால் அந்நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. இவை தவிர்த்து மற்ற ஐ.டி., நிறுவன பங்குகளும் உயர்ந்தன. இதனால் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் இருந்தன. ஆனால் மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாததாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததாலும் பங்குசந்தைகள் சரிந்தன. இதனால் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 348.40 புள்ளிகள் சரிந்து 25,024.35-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 108.15 புள்ளிகள் சரிந்து 7,500 புள்ளிகளுக்கு கீழ் சென்று 7,459.60-ஆக முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., ஹிண்டால்கோ, ஆக்சிஸ், ஐசிஐசிஐ., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி., கெயில் இந்தியா, எல்அண்ட்டி., என்டிபிசி., உள்ளிட்ட பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
இந்தவாரத்தில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1,075.73 புள்ளிகள் சரிந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் 937.71 புள்ளிகள் சரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|