பதிவு செய்த நாள்
12 ஜூலை2014
00:31
புதுடில்லி:நாட்டின் நிதி நிலைமை சீரடைந்ததற்கு பின்னர், தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து, முடிவெடுக்கப்படும் என, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறையை, மத்திய அரசு, எச்சரிக்கை உணர்வுடனும், மிகுந்த கவனத்துடனும் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பணவீக்கத்தை உன்னிப்பாக கவனித்து, அதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, நிதி துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பார்லிமென்டில் தெரிவித்தார். கடந்த ஐ.மு.கூட்டணி ஆட்சியில், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், தங்கம் இறக்குமதி மீதான வரி, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், சென்ற மே மாதத்தில், தங்கம் இறக்குமதி 72 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 219 கோடி டாலராக சரிந்தது. சென்ற நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 1.7 சதவீதமாக சரிவடைந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4.7 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|