பதிவு செய்த நாள்
12 ஜூலை2014
00:36
புதுடில்லி:நாடு, பொருளாதார சுணக்க நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான அடையாளமாக, தொழில்துறை உற்பத்தி, சென்ற மே மாதத்தில், 4.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 19 மாதங்களில் இல்லாத வளர்ச்சி என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டின் இதே மாதத்தில், தொழில்துறை உற்பத்தி, 2.5 சதவீதம் என்ற அளவில்பின்னடைவை கண்டிருந்தது. நடப்பாண்டு ஏப்ரலில் இத்துறையின் உற்பத்தி, 3.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது. நடப்பு நிதிஆண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான முதல் காலாண்டில்,தொழில்துறை உற்பத்தி, 4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 0.5 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், தயாரிப்பு துறை உற்பத்தி, 3.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 0.7 சதவீதம் பின்னடைந்து காணப்பட்டது.சுரங்க துறை உற்பத்தி, 2.6 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 4.7 சதவீதம் சரிவடைந்திருந்தது.கணக்கீட்டு காலாண்டில், மின் துறை உற்பத்தி, 5.3 சதவீதத் திலிருந்து, 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்த 22 தொழில்துறைகளில், 16துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில்தான், தொழில்துறை உற்பத்தி, சாதனை அளவாக, 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|