பதிவு செய்த நாள்
12 ஜூலை2014
00:38
மும்பை:நடப்பு வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 26 காசு உயர்ந்தது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 60.20 ஆக இருந்தது. நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 60.25 ஆக காணப்பட்டது. இந்த மதிப்பு, வர்த்தகத்தின் இடையே மேலும் சரிவடைந்து, 60.30 வரை சென்றது.
எனினும் வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 0.44 சதவீதம் அதிகரித்து, 59.94ல் நிலை கொண்டது. இறக்குமதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கான டாலர் தேவை குறைந்ததால், அதன் மதிப்பு சரிவடைந்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில், ரூபாய் மதிப்பு மேலும் உயர்வதை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி, அதிக அளவில் டாலரை வாங்கியது. இதனால், டாலர் மதிப்பின் சரிவு தடுக்கப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|