பதிவு செய்த நாள்
13 ஜூலை2014
00:25
புதுடில்லி:சென்ற மார்ச்சுடன் முடிந்த 2013–14ம் நிதியாண்டில், வெங்காயம் உற்பத்தி, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.93 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இதற்கு முந்தைய நிதிஆண்டில், இதன் உற்பத்தி, 1.68 கோடி டன்னாக இருந்தது என, வேளாண் துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யாண் பார்லிமென்டில் தெரிவித்தார்.
டந்த சில ஆண்டுகளாக, ரபி பருவத்தில் (மார்ச்–மே), வெங்காயம் விலை சீராக இருந்து வருகிறது.ஆனால், ஜூன் மாதம் முதல் விலை அதிகரித்து வருவது வாடிக்கையாக உள்ளது.நடப்பாண்டிலும், மார்ச் – மே மாத காலத்தில், சில்லரை விற்பனையில், 17–19 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெங்காயம் விலை, ஜூலையில், 26 ரூபாயை தாண்டியுள்ளது.
இதற்கு, பருவநிலை மாற்றம், தேவை அதிகரிப்பு, மூலப் பொருள் விலை உயர்வு, போக்குவரத்து செலவினம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளன என, அமைச்சர் மேலும் கூறினார்.வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில், அதை, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சேர்த்ததுகுறிப்பிடத்தக்கது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|