அன்னிய செலாவணி கையிருப்புரூ.3,720 கோடி ரூபாய் அதிகரிப்புஅன்னிய செலாவணி கையிருப்புரூ.3,720 கோடி ரூபாய் அதிகரிப்பு ... நாட்டின் வேளாண் துறை 4.7 சதவீதம் வளர்ச்சி நாட்டின் வேளாண் துறை 4.7 சதவீதம் வளர்ச்சி ...
குன்னுாரில் ரூ.8 கோடி தேயிலை துாள் தேக்கம்:வெளிநாட்டு வர்த்தகர்கள் புறக்கணிப்பு எதிரொலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
00:37

குன்னுார்:குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில், வெளிநாட்டு வர்த்தகர்கள் புறக்கணிப்பால், 8.84 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் தேக்கமடைந்துள்ளது.
‘வாட்’ வரி:நீலகிரி மாவட்டம் குன்னுார் டீசர்வ் மற்றும் தனியார் தேயிலை வர்த்தகர்களின் மையத்தில், தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது.28வது ஏலம் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் டீசர்வில் நடந்த ஏலத்தில் 5 சதவீதம் மட்டுமே தேயிலை விற்பனையானது. தேயிலை வர்த்தகர்கள் மையத்தில் நடந்த ஏலத்தில், 15 லட்சத்து 87 ஆயிரத்து 468 கிலோ இலை ரகமும், 7 லட்சத்து 48 ஆயிரத்து 231 டஸ்ட் ரகமும் என மொத்தம், 23 லட்சத்து 35 ஆயிரத்து 699 கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
இதில், 11.23 லட்சம் கிலோ மட்டுமே விற்பனையானது. இது 48.7 சதவீதமாகும். இந்த ஏலத்தில்,உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.அதனால், 8.84 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் விற்பனையாகவில்லை.கடந்த 3 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு ‘வாட்’ வரி வசூலித்துள்ள நிலையில், அதற்கான ‘எச்’ பார்ம் கொடுத்தும் வணிக வரித் துறை ‘ரிட்டர்ன்ஸ்’ கொடுக்காததால், அவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால்தான் வரலாறு காணாத அளவில் இந்த ஏலத்தில், 51.3 சதவீதம் தேயிலை துாள் தேக்கம்அடைந்துள்ளது.
மாற்றம் வேண்டும்:இதுகுறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் அம்பலவாணன் கூறுகையில், ‘‘ஏற்றுமதி வர்த்தகர்கள் ‘எச்’ பார்ம் கொடுத்தால், தேயிலை சட்டத்தின்படி ‘ரிட்டர்ன்ஸ்’ கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எந்ததெந்த விற்பனைக்கு எந்த முறை பொருந்துமோ, அதனை செயல்படுத்துவது குறித்து தேயிலை வாரிய தலைவருக்கு தெரிவித்துள்ளோம். அவருடைய அறிவுரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)