பதிவு செய்த நாள்
14 ஜூலை2014
00:37
குன்னுார்:குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில், வெளிநாட்டு வர்த்தகர்கள் புறக்கணிப்பால், 8.84 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் தேக்கமடைந்துள்ளது.
‘வாட்’ வரி:நீலகிரி மாவட்டம் குன்னுார் டீசர்வ் மற்றும் தனியார் தேயிலை வர்த்தகர்களின் மையத்தில், தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது.28வது ஏலம் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் டீசர்வில் நடந்த ஏலத்தில் 5 சதவீதம் மட்டுமே தேயிலை விற்பனையானது. தேயிலை வர்த்தகர்கள் மையத்தில் நடந்த ஏலத்தில், 15 லட்சத்து 87 ஆயிரத்து 468 கிலோ இலை ரகமும், 7 லட்சத்து 48 ஆயிரத்து 231 டஸ்ட் ரகமும் என மொத்தம், 23 லட்சத்து 35 ஆயிரத்து 699 கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
இதில், 11.23 லட்சம் கிலோ மட்டுமே விற்பனையானது. இது 48.7 சதவீதமாகும். இந்த ஏலத்தில்,உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.அதனால், 8.84 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் விற்பனையாகவில்லை.கடந்த 3 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு ‘வாட்’ வரி வசூலித்துள்ள நிலையில், அதற்கான ‘எச்’ பார்ம் கொடுத்தும் வணிக வரித் துறை ‘ரிட்டர்ன்ஸ்’ கொடுக்காததால், அவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால்தான் வரலாறு காணாத அளவில் இந்த ஏலத்தில், 51.3 சதவீதம் தேயிலை துாள் தேக்கம்அடைந்துள்ளது.
மாற்றம் வேண்டும்:இதுகுறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் அம்பலவாணன் கூறுகையில், ‘‘ஏற்றுமதி வர்த்தகர்கள் ‘எச்’ பார்ம் கொடுத்தால், தேயிலை சட்டத்தின்படி ‘ரிட்டர்ன்ஸ்’ கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எந்ததெந்த விற்பனைக்கு எந்த முறை பொருந்துமோ, அதனை செயல்படுத்துவது குறித்து தேயிலை வாரிய தலைவருக்கு தெரிவித்துள்ளோம். அவருடைய அறிவுரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|