குன்னுாரில் ரூ.8 கோடி தேயிலை துாள் தேக்கம்:வெளிநாட்டு வர்த்தகர்கள் புறக்கணிப்பு எதிரொலிகுன்னுாரில் ரூ.8 கோடி தேயிலை துாள் தேக்கம்:வெளிநாட்டு வர்த்தகர்கள் ... ... 3 மாதங்களில் 17 அன்னிய நிறுவனங்கள்இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கின 3 மாதங்களில் 17 அன்னிய நிறுவனங்கள்இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கின ...
நாட்டின் வேளாண் துறை 4.7 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
00:38

புதுடில்லி:சென்ற 2013–14ம் நிதிஆண்டில், வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகள், 4.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தல் துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் தெரிவித்தார்.
விவசாயிகள்:இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட (2007–2012) காலத்தில், வேளாண் துறை 4.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, இலக்கு அளவான, 4 சதவீதத்தை காட்டிலும் சற்று அதிகம்.கடந்த 2011ம் ஆண்டு நிலவரப்படி, உள்நாட்டில், வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை, 26.31 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், வேளாண் விவசாயிகளின் எண்ணிக்கை 11.88 கோடியாகவும், வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 14.43 கோடியாகவும் உள்ளது.
சென்ற 2001ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 23.41 கோடியாக (12.73 கோடி வேளாண் விவசாயிகள்; 10.68 கோடி வேளாண் தொழிலாளர்கள்) இருந்தது என, இந்திய தலைமை பதிவாளர் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.வேளாண் துறை மேம்பாட்டிற்கு, பண்ணை நடைமுறைகளை மேம்படுத்துவது, கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, உரிய நேரத்தில் கடன் வழங்குவது, குறைந்தபட்ச ஆதரவு நடவடிக்கை மூலம் வேளாண் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வகை செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இடவசதி:இதற்கிடையே, மத்திய அமைச்சர் விஜய் குமார் சிங் கூறுகையில், ‘விவசாயிகளிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும்பட்சத்தில், இயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்வதில், வடகிழக்கு மாநிலங்கள் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும். இதற்கான திறன் இம்மாநிலங்களில்அதிகமாகவே உள்ளது.மேலும், வேளாண் பொருட்களை சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாததால், ஆண்டு தோறும், 40 சதவீத உணவு பொருட்கள் வீணாகிறது’ என்று கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)