பங்கு சந்­தையை புரட்டி போட்ட ‘கார்:மத்­திய அரசின் விளக்­கத்தால் நாளை நிமி­ருமா?பங்கு சந்­தையை புரட்டி போட்ட ‘கார்:மத்­திய அரசின் விளக்­கத்தால் நாளை ... ... இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குவியும் முதலீடு: 6 ஆண்டுகளில் காணாத உயர்வு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
00:45

மும்பை:கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சென்ற ஜூன் மாதம், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், 7,309 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு, சென்ற மாதம் தான், இந்த அளவிலான முதலீடு குவிந்துள்ளது.
அன்னிய நிறுவனங்கள்:பங்குச் சந்தையின் எழுச்சி காரணமாக, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், தொடர்ந்து மூன்று மாதங்களாக, முதலீடு அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு, ஏப்ரலில், இவ்வகை திட்டங்களில், 208 கோடி ரூபாயாக இருந்த முதலீடு, மே மாதம், 2,452 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குவிந்த மொத்த முதலீட்டை (8,708 கோடி ரூபாய்) விட, நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிக அளவில் முதலீடு (8,935 கோடி ரூபாய்) செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்ற ஜூன் மாதம், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், 3 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், அம்மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இணைந்துள்ள நீண்ட கால முதலீட்டாளர்கள் பலர், லாப நோக்கம் கருதி, கணக்கை முடித்து வெளியேறி உள்ளனர்.
குறுகிய காலம்:அதே சமயம், மே மாதத்தில் கணக்கு முடிக்கப்பட்ட தொகையை (430 கோடி ரூபாய்) ஒப்பிடும் போது, அது, ஜூன் மாதம் 156 கோடி ரூபாய் என்ற அளவில் குறைவாகவே உள்ளது.குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்யும் ‘லிக்யுட் பண்டு’ திட்டங்களில் இருந்து, சென்ற ஜூன் மாதம், 67,697 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது; மே மாதம், 22,010 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஜூன் மாதம், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த திட்டங்களின் சொத்து மதிப்பு, 9.74 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, முந்தைய மே மாதம், 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மடங்கு:பரஸ்பர நிதி திட்டங்களில் தொடர்ந்து முதலீடு அதிகரித்து வந்தால், அடுத்த 2–3 ஆண்டு களில், பரஸ்பர நிதியங்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, தற்போதுள்ளதை விட, இரு மடங்கு அதிகரிக்கும் என, இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
கடன்பத்திர முதலீடு சரியுமா ?:மத்திய பட்ஜெட்டில், கடன்பத்திர முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்கும் வருவாய்க்கு, 10 சதவீதமாக இருந்த மூலதன ஆதாய வரி, 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நீண்ட கால முதலீடு என்பது, ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடன்பத்திர திட்டம் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இவ்வகை முதலீடுகளில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளதால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என, பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)