ரூபாய் மதிப்பு11 காசு சரிவுரூபாய் மதிப்பு11 காசு சரிவு ... ரூபாய் மதிப்பு 5 காசு உயர்வு ரூபாய் மதிப்பு 5 காசு உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொரு­ளா­தார வளர்ச்சி மேம்­படும்: ஜெட்லி நம்­பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2014
23:28

புது­டில்லி:‘‘நடப்பு நிதி­யாண்டில், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, முந்­தைய, 2013 – 14ம் நிதி­யாண்டின் அள­வான, 4.7 சத­வீ­தத்தை காட்­டிலும் மேம்­படும்,’’ என, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பார்­லி­மென்டில் தெரி­வித்தார்.
முதலீட்டு விகிதம்:இது­கு­றித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்த, 2011 – 12ம் நிதி­யாண்டில், 35.5 சத­வீ­த­மாக இருந்த முத­லீட்டு விகிதம், 2012 – 13ல், 34.8 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்­ளது. முத­லீட்டு நட­வ­டிக்­கைகள் சுணக்கம் கண்­ட­தை­ய­டுத்து, கடந்த இரண்டு நிதி­யாண்­டு­க­ளாக, நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5 சத­வீ­தத்­திற்கும் கீழாக சரி­வ­டைந்­தது.
ஆனால், தற்­போது, நடப்பு கணக்கு பற்­றாக்­குறை கட்­டுக்குள் வந்­துள்­ளது. சர்­வ­தேச நாடு­களின் பொரு­ளா­தாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரு­கி­றது.இவை தவிர, நிதி­நிலை மேம்­பாடு மற்றும் தொழில் துறை வளர்ச்சி சூடு­பி­டிப்பு போன்­ற­வற்றால், நடப்பு நிதி­யாண்டில், பொரு­ளா­தார வளர்ச்சி சிறப்­பாக இருக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.
பட்ஜெட் விவா­தத்தின் போது பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி கூறி­ய­தா­வது:தற்­போ­தைய பொரு­ளா­தார சுணக்க நிலைக்கு, முந்­தைய, ஐ.மு., கூட்­டணி அரசின் தவ­றான கொள்­கை­களே முக்­கிய காரணம். நடப்பு நிதி­யாண்­டிற்­கான பட்­ஜெட்டில், பொரு­ளா­தா­ரத்தில் நீடித்த வளர்ச்­சியை உரு­வாக்கும் வகையில், பல்­வேறு திட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ளன.
வேலைவாய்ப்பு:குறிப்­பாக, இன்­சூரன்ஸ், பாது­காப்பு உள்­ளிட்ட பல துறை­களில் அன்­னிய நேரடி முத­லீட்டை அனு­ம­திப்­பது உள்­ளிட்ட, தனியார் முத­லீ­டு­களை அதி­க­ளவில் கவரும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.இது, உள்­நாட்டில், தொழில் மற்றும் தயா­ரிப்பு துறை­களை ஊக்­கு­விப்­ப­தோடு, வேலை­வாய்ப்­பு­க­ளையும் உரு­வாக்கும்; இதன் கார­ண­மாக, பொரு­ளா­தாரம் மீட்சி பெறும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)