பதிவு செய்த நாள்
21 ஜூலை2014
00:10
இந்தியாவிலிருந்து, பருத்தி நுாலிழை இறக்குமதி செய்வதை சீனா தொடர்ந்து குறைத்து வருகிறது.மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கான, இந்தியாவின் பருத்தி ஏற்றுமதியும் சரிவடைந்துள்ளது.இதனால், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும், இந்திய நுாற்பாலைகளிடையே பருத்திக்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளது.
இறக்குமதி:குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல், பருத்திக்கான தேவை, 15–20 சதவீதம் குறைந்து போயுள்ளது. இதன் விளைவாக, ஒரு கேண்டி பருத்தி (356 கிலோ) விலை, 500 ரூபாய் வரை குறைந்துள்ளது.இந்த நிலை தொடரும் பட்சத்தில், ஒரு கேண்டி பருத்தி, 1,000–2,000 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது என, தென்னிந்திய நுாற்பாலைகள் கூட்டமைப்பின் செயலர் (பொது) கே.செல்வராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து, இந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் செயலர் (பொது) டீ.கே.நாயர் கூறும்போது:உள்நாட்டுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி செய்யப்படும் பருத்தியின் விலை மிகவும் குறைவாக உள்ளது. அதாவது, இறக்குமதி செய்யப்படும் ஒரு கேண்டி பருத்தி விலை, 41 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதேசமயம், உள்நாட்டில் இதன் விலை, 42,500 – 43,000 ரூபாய் என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது.இதனால், இந்திய நுாற்பாலைகள், மேற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பருத்தியை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கின்றன.
பருவமழை:இதன் தாக்கத்தால், உள்நாட்டு பருத்திக்கான தேவை மிகவும் குறைந்து, விலை வீழ்ச்சி கண்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, பருவமழை தாமதமாகி வருவதையடுத்து, மகாராஷ்டிரா, குஜராத் மாநில விவசாயிகள், நெல், நிலக்கடலை ஆகியவற்றை தவிர்த்து, பருத்தி பயிரிடுவதில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். மின் சப்ளை மேம்பட்டதையடுத்து, நடப்பாண்டு ஏப்.,–மே மாத காலத்தில், நாட்டின் பருத்தி நுாலிழை உற்பத்தி, 5 சதவீதம் அதிகரித்து, 66.20 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது என, ஜவுளி ஆணையரகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|