தயாரிப்பு துறை மந்த நிலையால் வெள்ளி இறக்குமதி வீழ்ச்சிதயாரிப்பு துறை மந்த நிலையால் வெள்ளி இறக்குமதி வீழ்ச்சி ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.30 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.30 ...
தேவை குறைவால் பருத்தி விலை மேலும் சரியும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2014
00:10

இந்தியாவிலிருந்து, பருத்தி நுாலிழை இறக்குமதி செய்வதை சீனா தொடர்ந்து குறைத்து வருகிறது.மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கான, இந்தியாவின் பருத்தி ஏற்றுமதியும் சரிவடைந்துள்ளது.இதனால், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும், இந்திய நுாற்பாலைகளிடையே பருத்திக்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளது.
இறக்குமதி:குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல், பருத்திக்கான தேவை, 15–20 சதவீதம் குறைந்து போயுள்ளது. இதன் விளைவாக, ஒரு கேண்டி பருத்தி (356 கிலோ) விலை, 500 ரூபாய் வரை குறைந்துள்ளது.இந்த நிலை தொடரும் பட்சத்தில், ஒரு கேண்டி பருத்தி, 1,000–2,000 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது என, தென்னிந்திய நுாற்பாலைகள் கூட்டமைப்பின் செயலர் (பொது) கே.செல்வராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து, இந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் செயலர் (பொது) டீ.கே.நாயர் கூறும்போது:உள்நாட்டுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி செய்யப்படும் பருத்தியின் விலை மிகவும் குறைவாக உள்ளது. அதாவது, இறக்குமதி செய்யப்படும் ஒரு கேண்டி பருத்தி விலை, 41 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதேசமயம், உள்நாட்டில் இதன் விலை, 42,500 – 43,000 ரூபாய் என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது.இதனால், இந்திய நுாற்பாலைகள், மேற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பருத்தியை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கின்றன.
பருவமழை:இதன் தாக்கத்தால், உள்நாட்டு பருத்திக்கான தேவை மிகவும் குறைந்து, விலை வீழ்ச்சி கண்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, பருவமழை தாமதமாகி வருவதையடுத்து, மகாராஷ்டிரா, குஜராத் மாநில விவசாயிகள், நெல், நிலக்கடலை ஆகியவற்றை தவிர்த்து, பருத்தி பயிரிடுவதில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். மின் சப்ளை மேம்பட்டதையடுத்து, நடப்பாண்டு ஏப்.,–மே மாத காலத்தில், நாட்டின் பருத்தி நுாலிழை உற்பத்தி, 5 சதவீதம் அதிகரித்து, 66.20 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது என, ஜவுளி ஆணையரகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)